கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் - எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கறுப்பர் கூட்டம் சேனல் நிர்வாகிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் - எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு
x
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி செந்தில் வாசனை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கந்த சஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டது தொடர்பாக, சேனலின் நிர்வாகி செந்தில் வாசன் கைது செய்யப்பட்டார். வீடியோவில் பேசிய  சுரேந்திரன் சரணடைந்தார். இந்நிலையில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவினர் மனு தாக்கல் செய்தனர். சுரேந்திரன் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், செந்தில் வாசனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்