500க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் பட்டங்கள் பறிமுதல் - இருவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் பட்டங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
500க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் பட்டங்கள் பறிமுதல் - இருவர் கைது
x
சென்னையில் பட்டம் விடுதல், மாஞ்சா நூல் விற்பனை, பதுக்குதல், இறக்குமதி செய்தல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர் பறிக்கும் மாஞ்சா நூலை விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையும் எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. சென்னை அமைந்தகரை பகுதியில் பட்டம் விட்ட சிலரை போலீசார் விரட்டி பிடித்து விசாரித்ததில், விருகம்பாக்கம் பகுதியில் பட்டம் மற்றும் மாஞ்சா நூல் வாங்கியது தெரியவந்தது.  இதையடுத்து விருகம்பாக்கம் பூபதி தெருவில் உள்ள செருப்பு  குடோன் நடந்த சோதனையில்,  மூன்று பெட்டிகள் நிறைய 500க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குடோன் உரிமையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்