குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் நகராட்சியில், வரும் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் வகையில், குடியாத்தம் நகராட்சியில், வரும் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எட்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். அந்த 8 நாட்களும், காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும், மற்ற அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story