ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை - 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
x
நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், கீழ்அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்த நிலையில், அதே பகுதியில் தனது நிலத்துக்கு சென்றபோது, கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடலூர் அரசு மருத்துவமனை எதிரில் நிகழ்ந்த இந்த போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்