சென்னையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க அழைப்பு

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
x
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், தவறாது பங்கு கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தி உள்ளார். இந்த கூட்டத்தில், தற்போது தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ள மின் கட்டண உயர்வு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்