மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு
மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று மதுரையில், பரவி வருவதை தடுக்கும் வகையில், மாநகராட்சி பகுதி மற்றும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் வரும் 14-ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14-ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும்,ஜூலை 15 அதிகாலை முதல் 31 ம் தேதி வரை வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story