10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல் வழங்க உத்தரவு

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகம் மற்றும் கல்வி பயில தேவையான பொருட்களை வழங்குமாறு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல் வழங்க உத்தரவு
x
இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு அவர் விடுத்துள்ள உத்தரவில், வரும் கல்வியாண்டின் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் தவிர்க்க பாட நூல்களை வழங்கக் கூறியுள்ளார். அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல் வழங்கப்பட வேண்டும் எனவும், கல்வி தொடர்பான வீடியோக்கள் மடி கணினியில் பதிவேற்றம் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பள்ளியிலும், குறிப்பிட்ட நாட்களில், அதிகபட்சம் 20 மாணவர்களை வரவழைத்து, சமூக இடைவெளியை பின்பற்றி பாடநூல்களை வழங்குமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்