20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது. மதுரை கிழக்கு மற்றும் மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய தாலுகாக்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், வெளியில் உள்ள மதுரைக்குள் வருவரோரை தடுக்கும் விதமாக மாநகரை சுற்றி 20 சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். இ-பாஸ் இல்லாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்று முதல்15ஆம் தேதி வரை 24மணி நேரமும் சோதனை நடைபெறும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி வினய் கூறியுள்ளார்.
Next Story