அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு

புதூர் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகட்ட வழங்கும் திட்டத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது
அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு
x
மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதூர் கிராமத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வீடுகட்ட வழங்கும் திட்டத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஒரே பயனாளியின் பெயரில் வெவ்வேறு திட்டங்களில் வீடு வழங்கியதும் தெரியவந்துள்ளது. அதேபோல் குடிசையில் வாழ்ந்துவரும் பலருக்கும் வீடு கட்டி கொடுக்கப் பட்டுள்ளதாக கூறி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்