"கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் ஆலோசனை சொல்லவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
x
கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காததால் திமுக எம்.எல்.ஏவை இழந்துள்ளதாக கூறினார். மேலும்,  அரசின் மீது அவதூறு பரப்புவதையே திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்