வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விவகாரம்: "ஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு" - சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
x
பட்டியலின மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது ஆர்.எஸ் பாரதி மே 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்