ஓடும் பேருந்தில் கொரோனா பாதித்த நபர்கள் - பேருந்தில் இருந்து இறங்கி அலறியடித்து ஓடிய பயணிகள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து - வடலூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணித்த கணவன் மனைவிக்கு கொரோனா உறுதியானது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து - வடலூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணித்த கணவன் மனைவிக்கு கொரோனா உறுதியானதாக அவர்களது போனில் அழைத்த சுகாதார பணியாளர்கள் தெரிவித்த நிலையில், அதை கண்டக்டரிடம் சொல்லி பேருந்தை நிறுத்தி ஆம்புலன்சில் ஏற கூறியுள்ளனர். கொரோனா பாதித்த நபரின் செல்போன் வாங்கிய பேருந்தின் கண்டக்டர் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசி உள்ளார்.இதனால் பீதியடைந்த நடத்துனரும் ஓட்டுநரும் பேருந்தை விட்டு கீழே இறங்கி நிலையில்,பயணிகள் பேருந்தை விட்டு அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story