காணிக்கை பொருட்களை பங்கிட்டுக் கொண்ட பூசாரிகள் - இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பூசாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது.
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் விலை உயர்ந்த பட்டு புடவைகளை திருடியதாக குற்றம் சாட்டு எழுந்தது. இந் நிலையில், அறங்காவல் குழுவை சேர்ந்த பூசாரிகள் ராமர், கதிரேசன், அரிராம் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பூசாரிகள் காணிக்கை பொருட்களை பங்கீட்டுக் கொள்ளும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Next Story