சிறுமி மர்ம மரண வழக்கில் திடீர் திருப்பம் : நரபலி கொடுத்தேன்- சிறுமி தந்தை வாக்குமூலம்

கந்தர்வகோட்டை அருகே 13 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, மகளை நரபலி கொடுத்ததாக தந்தை வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
நொடியூர் தைல மரக்காட்டில் உள்ள குளக்கரையில் கடந்த 18ஆம் தேதி மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை கொன்றதாக தந்தை பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினரும் கைது செய்யப்பட்டார். நரபலி கொடுக்க சொன்ன பெண் மந்திரவாதியை பிடித்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்