வருவாய்த்துறைக்கான புதிய கட்டடங்கள் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிறைவுபெற்ற 8 கோடி 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
வருவாய்த்துறைக்கான புதிய கட்டடங்கள் - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் அமைக்கப்ப்டட வட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்புகள், அரியலூரில் கட்டப்பட்டள்ள சார் ஆட்சியர் குடியிருப்பு, சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். அத்துடன், நில அளவை, நிலவரி திட்ட இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் 8 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிடும் அடையாளமாக 4 பேருக்கு நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்