"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
x
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  உலக நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக தெரிவித்தார். அதிமுக அரசு மக்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டது என்பதற்காக  திமுகவினர் திட்டமிட்டு பொய் புகார்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகளை ரஜினி, கமல் போன்றோர் கவனித்து வருவதாகவும், அரசின் நடவடிக்கை போதுமானதாக இருப்பதால்  அவர்கள் அமைதியாக உள்ளனர் எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

//////////////////

Next Story

மேலும் செய்திகள்