ஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து , காலை முதல் மதியம் வரை வழக்கமான பணிகள் நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
ஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு
x
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து,  காலை 10.30  மணி முதல் மதியம் 1.30  மணி வரை வழக்கமான பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைகளில், மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் மற்றும் அரசு வழக்கறிஞர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மதியம் 2.30 மணியில் இருந்து மாலை 4.45 மணி வரை, முக்கிய வழக்குகளுக்கு மட்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும். வழக்கமான நீதிமன்ற வழக்கு விசாரணைகளும்,  வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, வழக்கறிஞர்களுக்கு புதிய ஆடை கட்டுப்பாடு,  முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், எப்போது வேண்டுமானாலும் தளர்வுகள் திரும்ப பெறப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்