செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு

சென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு
x
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி வரை 267 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 20 நாளில் 827 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 20 நாளில் மட்டும் 7 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்படியாக சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் தாலுகாக்களில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லாவரம் நகராட்சியில் 121 பேரும், தாம்பரம் நகராட்சியில் 118 பேரும், பரங்கிமலையில் 125 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்