கீழடி அகழாய்வு பணி - மழையால் நிறுத்தம்

கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணி, மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழாய்வு பணி - மழையால் நிறுத்தம்
x
கீழடி, அகரம் உள்ளிட்ட 4 இடங்களில் கடந்த 20ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இந்நிலையில், நேற்று மாலை திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அகழாய்விற்காக தோண்டப்பட்ட குழிகளில் மழை நீர் தேங்கியது. மழை நீரை வெளியேற்றினாலும் பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் இன்று நடைபெற வேண்டிய பணிகள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் அங்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால், இனிமேல் ஜூன்1ம் தேதி தான் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்