சிக்கியது போதைப்பொருள் கடத்தல் கும்பல்: ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிக்கியது போதைப்பொருள் கடத்தல் கும்பல்: ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
x
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 9 பேர் கொண்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வீரசங்கிலி மடம் கிராமத்தில் கடந்த 1 ஆம் தேதி இலங்கைக்கு கடத்த இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அப்துல் ரஹீம், அஜ்மல்கான், ஆசாத் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் , கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்