விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த 13ம் தேதியன்று கொரோனா தடுப்பு பணியை முடித்து விட்டு வீடு திரும்பும்போது கிராம நிர்வாக அலுவலர் குமார் உயிரிழந்தார். இந்நிலையில் நிவாரண உதவியை அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த குமாரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்