ரேசன் அட்டையை அடமானம் வைத்து கடன் வாங்கி மக்கள் - ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தம்பதி கைது
ஒட்டன்சத்திரம் அருகே நூதன முறையில் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கணவன் மனைவியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஒட்டன்சத்திரம் அருகே நூதன முறையில் ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த கணவன் மனைவியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மற்றும் அவரது மனைவி பாலுத்தாய் ஆகிய இருவரும் ஆதிதிராவிடர் காலணியைச் சேர்ந்த ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு கடனாக கொடுத்த பணத்திற்கு பதிலாக ரேசன் அட்டையை அடமானத்திற்கு பெற்று கொண்டுள்ளனர். அந்த அட்டைக்கான அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
Next Story