அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா உறுதி

சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியான நிலையில், 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதேபோல், திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அம்மா உணவகத்தில், பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் ஊழியர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்