கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரி - சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒசூரை சேர்ந்த ஒருவரின் ரத்த மாதிரி,மறுபரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரி - சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
x
ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் மைசூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அனைத்து ஊழியர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒசூரை சேர்ந்த ஊழியரும் தமது வீட்டிற்கு வந்து தனிமையில் இருந்து வந்துள்ளார். நிறுவன அறிவுறுத்தலின் பேரில்  அவர் ஒசூர் அரசு மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனைக்கு செய்து கொண்ட போது  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் அவரது ரத்த மாதிரி,  மறுபரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த முடிவுகள் வந்த பின்னரே, ஒசூர் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்