"ஸ்டாலினின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.
x
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குற்றம் சொல்லிவரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்தை இனி பொருட்படுத்தப் போவதில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்