கொரோனாவுக்கு மேலும் இருவர் பலி - சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
x
கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நேற்று இரவு, புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் உயிரிழந்தார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்