ஈஸ்டர் பண்டிகை - முதலமைச்சர், துணை முதல்வர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், அதிமுக சார்பில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகை - முதலமைச்சர், துணை முதல்வர் வாழ்த்து
x
ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், அதிமுக சார்பில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் கொரோனா நச்சுக்கிருமியை எதிர்த்து ஓரணியில் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், புதிய நம்பிக்கையை தருவதாக ஈஸ்டர் பெருவிழா அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக நன்மைக்காக விழித்திருந்தும் தனித்திருந்தும் வீட்டில் இருந்தபடியே இறை வழிபாடுகளை செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்