"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும் - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்
x
பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் டெங்கு காய்ச்சல் பரவிய காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடுத்த நடவடிக்கையை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நில வேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்க, ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை அழிப்பதற்கும், தடுத்து நிறுத்துவதற்குமான மருந்து சித்த வைத்தியத்தில் நிச்சயம் உண்டு என்றும், மனிதகுலம் வாழ்வதற்கு வழி காட்டும் நல்வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றும் சைதை துரைசாமி குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்