மீன் விற்பனை செய்யும் சந்தை - அதிகாலை முதலே குவிந்த மக்கள் கூட்டம்

சென்னை காசிமேட்டில் மீன் விற்பனை செய்யும் சந்தையில், அதிகாலை முதலே ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்தது.
மீன் விற்பனை செய்யும் சந்தை - அதிகாலை முதலே குவிந்த மக்கள் கூட்டம்
x
தடை உத்தரவு குறித்து போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தாலும், காசிமேட்டில் அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும் என்ற எவ்வித கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல், விற்பனை செய்வதிலேயே முழு கவனமாக இருந்து வருகின்றனர். காசிமேடு மீன் சந்தை, கட்டுப்பாடின்றி வழக்கம் போல் செயல்பட்டு வரும் நிலையில், 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பிற்கு இருப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்