மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டதால் அங்கேயே தவித்து வருகின்றனர். எனவே தங்கள் ஊரில் உள்ள உறவினர்களை தொடர்பு கொண்ட அவர்கள், தங்களை மீட்குமாறு வலியுறுத்தி வீடியோ ஒன்றை அனுப்பினர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் 600 பேரை உடனே மீட்க வேண்டும் என கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story