ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபரை கட்டி போட்டு 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை
x
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பால்குளத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த 2 மர்ம நபர்கள், இரவு வீட்டிற்குள் நுழைந்து பீரோவை உடைக்க முயன்றுள்ளனர். அதிகாலை  சத்தம் கேட்டு எழுந்த பாலசுப்பிரமணியன், கூச்சலிட முயன்ற போது, அந்த மர்ம நபர்கள் அவரது கை கால்களை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்