ஓசூர் அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

ஒசூரில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
ஓசூரை அடுத்த அலசநத்தம் பகுதியில் உள்ள தனியார் கேஸ் குடோனில் இருந்து 450 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் ஆட்டோ, இருசக்கர வாகனம் என 10க்கும்  மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் மருந்து கடை, எலெக்ட்ரிக்கல் கடை என 12 கடைகளும் தீயால் உருக்குலைந்தது. இந்த விபத்தால் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்