தமிழிசையை அவதூறாக சித்தரித்ததாக புகார் - பேஸ்புக் பிரபலம் மன்னை சாதிக் கைது

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டதாகக் கூறி மன்னார்குடி சாதிக் பாட்ஷா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழிசையை அவதூறாக சித்தரித்ததாக புகார் - பேஸ்புக் பிரபலம் மன்னை சாதிக் கைது
x
சாதிக் பாட்ஷா என்பவர், தமது பேஸ்புக் பக்கத்தில் கடந்த 11 ஆம் தேதி பதிவிட்ட புகைப்படம்  குறித்து, மன்னார்குடி பாஜக நகரச் செயலாளர் ரகுராமன்,  காவல்நிலையத்தில் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்குப் பதிந்த போலீஸார் சாதிக் பாட்ஷாவை கைது செய்தனர். பின்னர்  மன்னார்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு, ஆஜர்படுத்தப்பட்டு, கிளை சிறையில் நேற்று முன் தினம் இரவே அடைக்கப்பட்டார். இவர், மன்னை சாதிக்  என்ற பெயரில், வலைதளங்களில் தனது கருத்துக்களை வித்தியாசமான முறையில் பதிவிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். இதன் காரணமாக சினிமாவில் துணை நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். களவாணி, நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்