"ஒசூரில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம்" - பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
சென்னைக்கு அடுத்தபடியாக ஓசூரில் தொழில் தொடங்க அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பேரவையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
உறுப்பினர் சத்யாவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய எம்.சி.சம்பத், ஆட்டோ மொபைல் வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் 4000 ஏக்கரில் பரப்பளவில் பி6 இஞ்சின்கள் தயாரிக்ககூடிய வகையில் எலக்ட்ரிக் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.சி.சம்பத் குறிப்பிட்டார்.
Next Story