ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
x
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கிய நிலையில், சத்சங்கம் அமைப்பின் சார்பில் சென்னையில் இந்த விழா நடத்தப்பட்டது. சுநந்தன் நம்பூதிரி தலைமையில் நடந்த பூஜைக்கு பின், பொங்கல் அடுப்பிற்கு அக்னி அளிக்கப்பட்டது. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்