ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாகையில், 367 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ. 367 கோடியில், புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை: அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் 367 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட  மத்திய அரசு அனுமதி வழங்கியது . இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர்  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.

இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் 
ஹர்ஷ் வர்தன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்