"பயோ-மெட்ரிக் வருகை செய்யப்படுகிறதா?" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

அரசு மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, பயோ மெட்ரிக் முறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பயோ-மெட்ரிக் வருகை செய்யப்படுகிறதா? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
x
அரசு மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, பயோ மெட்ரிக் முறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர், பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவு செய்யபடுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலிபணியிடங்களு நிரப்புவுது குறித்து பதில் மனு தாக்கல்செய்யுமாறு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 



Next Story

மேலும் செய்திகள்