பிளாஸ்டிக் குழாய் விற்பனை நிறுவனத்தில் வருமான வரி சோதனை - 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிறுவனத்தில் ஆய்வு
ஈரோடு சத்தி ரோட்டில் இயங்கி வரும் பாரி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் காலை முதல் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சத்தி ரோட்டில் இயங்கி வரும் பாரி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தில் காலை முதல் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக, இந்த நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது தொழில் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது சிறு-குறுந் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story