இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த 5 பேரை துரத்திப் பிடித்த இந்திய கடற்படை
இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த ஐந்து பேரை, இந்திய கடற்படையினர் துரத்திப் பிடித்தனர்.
இலங்கையிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த ஐந்து பேரை, இந்திய கடற்படையினர் துரத்திப் பிடித்தனர். இலங்கை மன்னார் மாவட்டம் பியர் பகுதியிலிருந்து, பிளாஸ்டிக் படகில் ஐந்து பேர் மீன் பிடிப்பதற்காக தனுஷ்கோடி பகுதிக்கு வந்த நிலையில், இந்திய எல்லைக்குள் இருந்த 5 பேரையும், இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் திரும்பி செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதையும் மீறி அங்கு இருந்ததால், ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த கடற்படை அதிகாரிகள், 5 பேரையும் மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story