காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீச்சு - கைதான இளைஞர் போலீஸில் வாக்குமூலம்

காதலியை சந்திப்பதற்காக மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை சிசிடிவி கேமிரா காட்டிக் கொடுத்ததை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீச்சு - கைதான இளைஞர் போலீஸில் வாக்குமூலம்
x
ஆத்தூர் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் மாங்காய் குடோன் தீப் பிடித்தது தொடர்பாக அதன் உரிமையாளர் பட்டிவீரன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில்  சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இளைஞர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு குடியிருப்பு பகுதிக்கு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து, இளைஞர் ராஜாங்கத்தை அடையாளம் கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் கூறிய தகவலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தமது காதலியை சந்திக்க, அவரது குடும்பத்தார் இடையூறாக இருப்பதால், அவர்களை திசை திருப்புவதற்காக, அருகிலுள்ள மாங்காய் குடோனில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசியதாக கூறியுள்ளார்.  
குடோன் தீப்பிடித்து எரியும் போது, காதலியின் குடும்பத்தார் உள்ளிட்ட கிராமத்தார், தீ எரிவதை வேடிக்கை பார்க்கும் நேரத்தில், தைரியமாகவும் சுதந்திரமாகவும், எந்தவித இடையூறும் இல்லாமல் காதலியை சந்தித்தாக இளைஞர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, போலீஸார் அந்த இளைஞரை கைது செய்தனர்.  இதனிடையே சம்பந்தமே இல்லாமல், தமது மாங்காய் குடோன் தீக்கிரையானதால், பாதிக்கப்பட்ட வியாபாரி, விரக்தி அடைந்தார். மாங்காய் வியாபாரியின் நிலையை நினைத்து, அய்யம்பாளையம் கிராம மக்கள் பரிதாபப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்