ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் - நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் அப்பாவு தரப்பில் முறையீடு

பிற வழக்குகளின் நேரத்தை பொறுத்தே ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணை பற்றி முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம் - நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் அப்பாவு தரப்பில் முறையீடு
x
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி,  அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட நிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை.

இதனையடுத்து, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில், வழக்கை  புதன்கிழமை விசாரணைக்கு எடுக்குமாறும், விசாரணை படடியலில் இருந்து நீக்கக்கூடாது எனவும் கூறி, அப்பாவு தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, இன்று ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகளின் தன்மை மற்றும் விசாரணை நேரம் ஆகியவற்றை பொறுத்து பார்க்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், கண்டிப்பாக விசாரணைக்கு எடுப்போம் என உறுதியளிக்க இயலாது என கூறினர். இதையடுத்து, இன்று மீண்டும் முறையிடுவதாக அப்பாவு தரப்பில் கூறப்பட்டபோது, முறையிடுங்கள் ஆனால் பிற வழக்குகளின் நேரத்தை பொறுத்து பார்க்கலாம் என ​​நீதிபதிகள் மறுபடியும் தெரிவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்