காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் : ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து, ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் : ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்பு
x
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை காலங்களில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்து, ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. பிப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, வனங்கள் அழிவதுடன், வனவிலங்குகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத்துறை பயிற்சி அளித்தது. காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது குறித்தும், தீக்காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்