டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழா : நாளை 2 மணிநேரம் போக்குவரத்து மாற்றம்

பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ள நிலையில், திருச்செந்துாரில் நாளை காலை10 மணி முதல் 12 மணி வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
x
பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ள நிலையில், திருச்செந்துாரில் நாளை காலை10 மணி முதல் 12 மணி வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் குரும்பூர், ஏரல், சாயர்புரம், புதுக்கோட்டை வழியாகவோ அல்லது குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வாகைக்குளம், புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல், குரும்பூர் வழியாகவும் அல்லது புதுக்கோட்டை, வாகைக்குளம், பேட்மாநகரம், ஸ்ரீவைகுண்டம் வழியாகவும் திருச்செந்தூர் செல்வதற்கும் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்