அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
x
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்தும், சிஏஏ தொடர்பாகவும் தவறான கருத்துக்களை கூறியதாக ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, வரும் 24 மற்றும் மார்ச் 4 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் ஸ்டாலின் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்