டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் - இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் விசாரிக்க முடிவு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஒம்காந்தன் ஆகியோரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் - இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் விசாரிக்க முடிவு
x
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக, இடைத்தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஒம்காந்தன் ஆகியோரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, முன்னதாக இருவரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இதனிடையே, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 2-ஏ மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, தற்போது வரை 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்