தலையில் அம்மி குழவியை போட்டு மனைவியை கொன்ற கணவன் - பிரச்சினைக்கு முழு முதல் காரணமாக இருந்த டிக் டாக்

டிக் டாக் மோகத்தில் சிக்கித் தவித்த மனைவியின் தலையில் அம்மிக் குழவியை போட்டு கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
தலையில் அம்மி குழவியை போட்டு மனைவியை கொன்ற கணவன் - பிரச்சினைக்கு முழு முதல் காரணமாக இருந்த டிக் டாக்
x
டிக் டாக் செயலியில் இருப்பவர்களுக்கு நன்கு அறிமுகமான இந்த பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி. எது தன்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது என நினைத்தாரோ இன்று அதுவே அவருக்கு எமனாகி இருக்கிறது... 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரை சேர்ந்த குமரவேலின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு கணவரையும், பள்ளிக்கு பிள்ளைகளையும் அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரிக்கு 
தனிமையை போக்க அறிமுகமானது தான் டிக் டாக். 

ஆரம்பத்தில் அதில் சின்ன சின்ன வீடியோக்களை பார்த்து ரசித்த ராஜேஸ்வரி நாளடைவில் விதவிதமான வீடியோக்கள் எடுத்து அதை பதிவு செய்துள்ளார். 
இதை விளையாட்டாக எடுத்துக் கொண்ட குமரவேல், தானும் மனைவியுடன் சேர்ந்து டிக் டாக்கில் நடித்து அதை பகிர்ந்துள்ளார். இதனிடையே ராஜேஸ்வரியின் நட்பு வட்டமும் விரிவடைந்துள்ளது. அவ்வப்போது டிக் டாக் நண்பர்களிடம் பல மணி நேரமாக போனில் பேசுவதை வழக்கமாக வைத்ததால் கணவன், மனைவி இடையே புயல் வீச தொடங்கியது. 

இதனிடையே குமரவேலுக்கும், திருநங்கைகளுடன் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்ததால் ராஜேஸ்வரியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டு வந்துள்ளார். இருந்தபோதிலும் குழந்தைகளின் நலன் கருதி இருவரும் அவ்வப்போது சண்டையை சமாதானமாக்கி வந்தனர். 

காதலர் தினத்தன்று காலையில் வீட்டை விட்டு சென்ற ராஜேஸ்வரி இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த குமரவேல், தன் மனைவியுடன் சண்டை போட்டதோடு இரவு தூங்கும் போது அவர் தலையில் அம்மி குழவியை போட்டு கொலை செய்தார். 

பின்னர் தன் குழந்தைகளோடு தப்பி சென்ற அவர், அவர்களை தன் தாய் வீட்டில் ஒப்படைத்து விட்டு தலைமறைவானார். இதையடுத்து தலைமறைவாக இருந்த குமரவேலை போலீசார் கைது செய்தனர். தாய் மரணமடைந்த நிலையில், தந்தையும் சிறைக்கு சென்றதால் குழந்தைகள் 2 பேரும் நிராதரவாக நிற்கும் நிலை... 


Next Story

மேலும் செய்திகள்