திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் சம்மன்

திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது.
x
திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது. உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாகவும் தமிழக அரசு தரப்பில் 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. இதேபோல சிஏஏ தொடர்பாக விமர்சித்ததற்கு ஒரு வழக்கும் தொடரப்பட்டது. தமிழக அரசு தொடர்ந்த இந்த மூன்று அவதூறு வழக்குகளை விசாரித்த, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு வழக்குகளில் பிப்ரவரி 24ஆம் தேதியும், சிஏஏ தொடர்பான வழக்கில் மார்ச் 4ஆம் தேதியும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்