56 மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை நிறைவு : தேர்தல், அ.தி.மு.க. கட்சி வளர்ச்சி குறித்து விவாதம்
அ.தி.மு.க. கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து 56 மாவட்ட நிர்வாகிகளுடன் நான்கு நாட்கள் நடந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், 56 மாவட்ட நிர்வாகிகளுடன் நான்கு நாட்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். நாளொன்றுக்கு தலா 14 மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று, சேலம் மாநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Next Story