பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
x
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அங்கன்வாடி மையம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் 3 வருடமாகியும், இதுவரை அங்கன்வாடி மையம் கட்டிமுடிக்காததால், குப்பை கூளங்களுக்கு நடுவே உள்ள பழைய கலையரங்கத்தில் தங்கள் குழந்தைகளை தங்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்