கொடைக்கானல் : தனியார் ரிசார்ட்டில் நிகழ்ச்சிகள் நடத்த தடை
கொடைக்கானல் அருகே பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள தனியார் ரிசார்ட் சார்பில் இசை, கலை , உணவு நிகழ்ச்சிகள் நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் அருகே பூம்பாறை மலைக்கிராமத்தில் உள்ள தனியார் ரிசார்ட் சார்பில் இசை, கலை , உணவு நிகழ்ச்சிகள் நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் தனியார் ரிசார்ட் பகுதியில் , நிகழ்ச்சி எதுவும் நடைபெறுகிறதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது பல மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் உயர்ரக கார்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
Next Story

